Sunday, 30 March 2014

கன்னிப் பாட்டு.

காட்டுப் பாட்டு

வருகுதய்யா வருகுதய்யா
வசந்தகாலம் வருகுதய்யா.
பெருகுதய்யா பெருகுதய்யா
பசுமை எங்கும் பெருகுதய்யா.

குளிர்ந்த காற்றும் வீசுதய்யா.
குருத்துக்களும் நீட்டுதய்யா.
வளர்ந்த பயிர் குனியுதய்யா
வளரும் பயிரை வாழ்த்துதய்யா.

சலசலன்னு காற்றோடு
கலகலன்னு பேச்சோடு
களையெடுக்கும் பெண்ணோடு
வளையொலிக்கும் பண்ணோடு.

ஊருக்குள் ஆளில்லை
காட்டுக்குள் இடமில்லை
சோத்துக்குப் பஞ்சமில்லை
சொர்க்கம் இனி தேவையில்லை.

பச்சை நிறக் கடலலையாய்
பயிர் நெளிந்து அலையலையாய்
உயிராகி உழவனுக்கு
உறவாகித் தொடருதய்யா.

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு:நான் ஆறாவது வகுப்புப் பயிலும்போது அதாவது எனது பதினோராவது வயதில் பாட்டுத்தேர்வுக்காக நான் சுயம் பாடிய முதல் பாட்டு.அதை இப்போது என் நினைவுக்குக் கொண்டுவந்து எழுதினேன்.