Wednesday, 22 January 2025

சின்னஞ் சிறு கிளி.

சின்னஞ்சிறுக் கிளியே!(குழந்தைப் பாடல்)

சின்னஞ்சிறு கிளியே !
செல்வக் களஞ்சியமே!
எண்ணப் பெருங்கொடையே!-என்றும்
இனிக்கும் தேனமுதே!(சின்ன)

உன்னைத் தீண்டையிலே
உள்ளம் குளிர்கிறதே!
என்னை நினைக்கையிலே!-கர்வம்
ஏறி வளர்கிறதே!(சின்ன)

அன்னை மடியினிலே!
ஆசை நிறைத்தவளே!
உன்னை அவள் வடிவில்
எண்ணக்  கிடைத்தவளே!(சின்ன)

தன்னை உணவாக்கி இன் ரன்
அன்னை வளர்த்தாளே
உன்னில் என்னுயிரை-அவள்
ஊட்டி வடித்தாளே!(சின்ன)

முன்னைப் பெரியவர்கள்
உன்னில் தெரிகின்றரே.
இந்நாள் என் தோளில்நீயோ
பிந்நாளை எழுதுகிறாய்.(சின்ன)

பெண் நீ பிறப்பதற்கு 
முன்தவம் இருந்ததற்கு
உன்னைப் பெற்றதற்கு-இறைவன்
உதவினான் வாழ்வதற்கு.(சின்ன)

பெண்ணின் பெருமைகளும்
உன்னில் அருமை சொலும்.
அன்னைத் தந்தையரும்உன்னால் 
அடைவோம் அருமைகளும்.(சின்ன)

உன்னைப் பெற்றதற்கும்
உலகம் எம்மைப் போற்றும்
பெண்ணை ஏற்றுதற்கும்நீயும்
உன்னை ஈந்திடணும்(சின்ன)

பழைமை மடைமைகளை
அவரின் மற்றத்து ஒழித்திடணும்.
பெண்மைத் தன்மை காத்தும்-தமிழின்
பண்பைக் காத்திடணும்.(சின்ன)

கற்றும் உயர்ந்திடணும்.
சுற்றம் அறிந்திடும்.
நுட்பந் தெளிந்திடணும்—கருத்தில்
திட்பம் நின்றிடணும்.
(சின்ன)

கொ.பெ.பிச்சையா.
  







காக்கை போல.

கூடி வாழ்வோமே.(குழந்தைப்பாடல்)

காக்கை போலக் கூடுவோம்-அது
காட்டும் நீதி பாடுவோம்.
பகிர்ந்து உண்டு வாழுவோம்-பிறர்
பசியைப் போக்க உதவுவோம்

எறும்பு போன்று உழைத்திடுவோம்-அது
இயங்கும் வாழ்வு வாழ்ந்திடுவோம்
சேர்க்கும் காலஞ் சேர்த்திடுவோம்-எதிர்
நோக்கும் நாளும் பார்த்திடுவோம்.

பாம்பும்  கூட நல்லதே!--அது
படத்தை விரித்துச் 
சொல்லுதே!
தேடிப் போயித் தீண்டாதே-தீய
தீவிர வாதம் செய்யாதே.

கிளியும் கண்டு பேசுது--பேசும்
மொழியும் கேட்டுப் பழகுது.
மொழிக்குச்  சண்டை போடாது--தமக்குள்
முட்டி மோதிச் சாகாது.

விலங்குகளைப்‌ மண்பாருஙகள்-அவை
வாழும் வனந் தாருஙகள்.
பேதம் அறியா வாழ்வினை-அதனில்
மனிதம் பழகிப்  படியுங்கள்.

பேதமில்லாமல் பறவைகள். 
சேதமில்லா உறவுகள்.
மனிதன் மட்டும் இனங்கூவி--அய்யோ.
மனம் கெட்டு வாழ்வதேன்?

பகவான் படைத்த படைப்பெல்லாம்--மனிதன்
பழகிப் புரிந்து அறிவதற்கே!--
மனிதன் தன்னை திருத்தி வாழ-- 
படிக்கும் பள்ளி உலகமே!

கொ.பெ.பிச்சையா.







வட்ட நிலவே வி.

வட்ட நிலவே வா வா.

வட்ட நிலவே வா !வா!
கிட்டக் கிட்ட வா ! வா!
எட்ட எட்டக் கிட்டக் கிட்ட 
தொட்டு விளையாட வாவா!

வெள்ள வெள்ளிச் சட்டையோ!
வேக மாகப் போவாயோ!
சொல்லைக் கேட்க மாட்டாயோ!
செல்லக் குட்டி வருவாயோ!

ஒளிஞ்சு விளை யாடுகிறாய்
ஓடி ஓடித் தேடுகிறாய்.
பாப்பா இங்கே இருக்குறேன்
பாராமல் ஏனோ ஓடுகிறாய்.

கண்டு பிடித்தது நானேதான்
கட்டி முத்தம் தந்திடுவாய்.
வந்து குதிரை ஏறுவேன்.
வரா விட்டால் தேடுவேன்.

கொ.பெ.பி.அய்யா.



.






குட்டி சைகிள்.

3)குட்டிச் சைக்கிள்,,

குட்டிக் குட்டிச் சைக்கிளாம்..
குட்டி ஓட்டும் சைக்கிளாம்..
சுழட்டி சுழட்டி ஓட்டினால்
சுழன்று ஓடும் சைக்கிளாம்.

மூன்று சக்கர சைக்கிளாம்
முன்னும் பின்னும் ஓட்டலாம்.
சாய்ந்தாலும் ஓட்டலாம்..
சாய்ந்திடாத சைக்கிளாம்.

வளைந்து வளைந்து ஓட்டலாம்.
வட்டமிட்டும் ஓட்டலாம்.
அம்மா அப்பா பிடிக்காமல்.
அப்படியே ஓட்டலாம்

வீட்டுக்குள்ளும் ஓட்டலாம்..
வீதியிலும் ஓட்டலாம்.
காற்று இல்லா சைக்கிளாம்.
கவலை யின்றி ஓட்டலாம்..

கொ.பெ.பி.அய்யா.