Wednesday, 22 January 2025

காக்கை போல.

கூடி வாழ்வோமே.(குழந்தைப்பாடல்)

காக்கை போலக் கூடுவோம்-அது
காட்டும் நீதி பாடுவோம்.
பகிர்ந்து உண்டு வாழுவோம்-பிறர்
பசியைப் போக்க உதவுவோம்

எறும்பு போன்று உழைத்திடுவோம்-அது
இயங்கும் வாழ்வு வாழ்ந்திடுவோம்
சேர்க்கும் காலஞ் சேர்த்திடுவோம்-எதிர்
நோக்கும் நாளும் பார்த்திடுவோம்.

பாம்பும்  கூட நல்லதே!--அது
படத்தை விரித்துச் 
சொல்லுதே!
தேடிப் போயித் தீண்டாதே-தீய
தீவிர வாதம் செய்யாதே.

கிளியும் கண்டு பேசுது--பேசும்
மொழியும் கேட்டுப் பழகுது.
மொழிக்குச்  சண்டை போடாது--தமக்குள்
முட்டி மோதிச் சாகாது.

விலங்குகளைப்‌ மண்பாருஙகள்-அவை
வாழும் வனந் தாருஙகள்.
பேதம் அறியா வாழ்வினை-அதனில்
மனிதம் பழகிப்  படியுங்கள்.

பேதமில்லாமல் பறவைகள். 
சேதமில்லா உறவுகள்.
மனிதன் மட்டும் இனங்கூவி--அய்யோ.
மனம் கெட்டு வாழ்வதேன்?

பகவான் படைத்த படைப்பெல்லாம்--மனிதன்
பழகிப் புரிந்து அறிவதற்கே!--
மனிதன் தன்னை திருத்தி வாழ-- 
படிக்கும் பள்ளி உலகமே!

கொ.பெ.பிச்சையா.







No comments:

Post a Comment