Tuesday, 18 February 2014

சின்னப் பெண்ணே சேதி கேளு.

சின்னப்பொண்ணே !
-------------சேதி கேளு!(குழந்தைப் பாடல்)

சின்னப்பொண்ணே!சின்னப்பொண்ணே!
சேதி கேளம்மா----உந்தன்
அன்னைப் பேச்சைக் கேட்டு வளர்ந்து
அருமை கொள்ளம்மா.-----

அம்மா
பெருமை அடையணும்-----நீயம்மா.
வளமை அடையணும் வளரம்மா.
காலம் மிகவும் கெட்டுப்  
போச்சு
கருத்தில் கொள்ளம்மா

-----அழகுக்
கோலம் போன்றே 
உன்னைக் காக்க
தெரிந்து கொள்ளம்மா.-----நீயும்
புரிந்து நடக்கனும்------பக்கம்
அறிந்து பழகணும்.

பெண்ணினந் தின்னும் பேய்கள் அலையும்
பார்தது விலகணும் ---எவரும்
அறியா மனிதர் அருகே வந்தால்
சரியாப் பேசி நெருங்காமல்---விட்டு
விலகிப் போகணும்----பாப்பா
உசார் ஆகணும்

பள்ளி வீடு இரண்டுந்தவிர வேறே எங்குமே
உற்றாரன்றி உறவென்றும் 
நம்பி நீயுமே!
அறியா யாருடனும் செல்ல வேண்டாமே.----- எவரும்
தின்னும்ம் பண்டம் தந்திட்டாலும்
வாங்க வேண்டாமே-----உடனே
நீங்க வேண்டுமே.

கொ.பெ.பிச்சையா.






No comments:

Post a Comment