Sunday, 16 February 2014

காந்தி தாதா.

குழ்ந்தைப்  பாடல் (காந்தித்தாத்தா)

காந்தித் தாத்தா.

காந்தித் தாத்தா பாரம்மா.
கருணை மனிதர் தானம்மா.
சட்டை யணியா தாத்தாம்மா.
சட்டம் படித்த மேதையம்மா.

வெள்ளையரை வென்றவர்.
விடுதலையைப் பெற்றவர்.
அகிம்சை வழி சொன்னவர்.
அகிலம் போற்ற நின்றவர்

உழவன்  நிலை  அறிந்தவர்.
உரிமைக் குரல் கொடுத் தவர்
கிராம ராஜ்யம் அமைத்தவர்.
கோட்டு சூட்டும் மறந்தவர்.

ஏழைக்காகப்  பிறந்தவர்
ஏழை போல வாழ்ந்தவர்.
இராட்டைக்  கற்றுத் தந்தவர்
பாட்டாளியை  மதித்தவர்.

கோட்டை ஆள தவிர்த்தவர்.
கொத்தடிமை ஒழித்தவர்.
நாட்டுக்காக உழைத்தவர்
வாட்டும் சிறைகளில் வாழ்ந்தவர்

இந்தியாவைக் காத்தவர்
இறைவனாகி இருப்பபவர்.
காந்தி மகான் தானிவர்.
கைகூப்பி வணங்குவோம்.

கொ.பெ.பி.அய்யா,




No comments:

Post a Comment