(குழந்தைப் பாடல்)
எம்ஜியாரு எம்ஜியாரு
என்பதே அவர் பேரு
என்றும் அவர் நம்மோடு
வாழ்கிறாரு சூப்பர் ஸ்டாரு.
எம்ஜியாரு எம்ஜியாரு
என்பதே அவர் பேரு
என்றும் அவர் நம்மோடு
வாழ்கிறாரு சூப்பர் ஸ்டாரு.
அன்பு கொண்ட நெஞ்சங்கள்
அவருக்குள்ள சொந்தங்கள்.
குழந்தையுள்ளம் கொண்டவர்.
கொஞ்சும் தமிழ் எம்ஜியாரு.
பேசும் தமிழ் இதயங்கள்
கொஞ்சும் தமிழ் எம்ஜியாரு.
பேசும் தமிழ் இதயங்கள்
வாழுங் கனி எம்ஜியார்.
மக்கள் போற்றும் தலைவராம்.
மக்கள் திலகம் எம்ஜியார்.
செல்லச் சின்னப் பிள்ளைகள்
நல்ல நாளைத் தலைவர்கள்.
பண்பில் மேலே உயரவே
படிக்கச் சொன்னார் எம்ஜியார்.
சத்தாய் உணவு உண்ணவும்
கருத்தாய் பாடம் படிக்கவும்
புத்தகம் பை பேனாவுடன்
மொத்தமும் கொடுத்தார் எம்ஜியார்.
தமிழகத்தின் முதல்வராய்
தலை சிறந்து ஆண்டவர்.
நல்ல குணம் கொண்டவர்,
வள்ளல் மனம் எம்ஜியார்,
உழைத்துச் சேர்த்தப் பொருளை எல்லாம்,
களைத்து வியர்த்த ஏழைக் களித்தார்.
பிறருக்காக வாழ்ந்த எம்ஜியார்
உறவுக்காக என்ன வைத்தார்?
கொ.பெ.பிச்சையா.


No comments:
Post a Comment