சொல்லிப் புரியனுமா- பாப்பா
துள்ளித் திரியனுமா- உனது
வெள்ளை மனம் போல-
எம்ஜியார்
வள்ளல் குணம் கேளு.
நீங்கள் நல்ல பிள்ளைகளாக,
உங்களை நம்பும் செல்லங்களாக
திங்கள் முகமவர் எம்ஜியார் பாடிய பாட்டு,
பொங்கும் ஊக்கம் தங்கட்டும் நல்ல குழந்தைகள் கேட்டு.
எங்கள் தங்கம் என்று தமிழகம் என்றும் கொண்டாடும்,
இதயக்கனி புரட்சி நடிகர் புரட்சித் தலைவராம்.
இறுதிவரை மூன்றுமுறை ஆண்ட முதல்வராம்.
தமிழகம் ஆண்ட முதல்வராம்.
வாரிக் கொடுத்த வள்ளலாக வாழ்ந்த பொன்மனம்,
நேர்மையாக நிசமாக ஆண்ட செம்மலாம்.
நாடும் செல்வம் ஏற்று ஏழ்மை வாழ்ந்த எம்ஜியார்,
வீடு வாசல் சொத்து எல்லாம் கொடுத்த எம்ஜியார்,
திரைப் படங்கள் எல்லாமே கதைப் படங்கள் ஆனாலும், அவர் படங்கள் சொல்லுவது அறத்தின் பாடஙகள்.
வாழும் போது வாழ்ந்த வரை மக்கள் திலகமே!
பூமி வாழும் காலம் மட்டும் எம்ஜியார் புகழே சாமியாம்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment